Monday 13 December 2010

எலி


பொறிக்குத் தப்பியவை
தங்கள்
குழந்தைகளையும்
என் அறைக்கு
அறிமுகம் செய்து வைத்துள்ளன.
நல்லவேளை...
புத்தகங்களைத் தின்னும்
சூட்சுமத்தை இன்னும்
கற்றுத் தரவில்லை

பொறி-
நஞ்சு..
இப்போ சலித்துவிட்டது.
ஜீவன் பிரிவதைத் தாங்க முடிவதில்லை.
'ஜீவகாருண்யத் தலைவனாக்கலாமோ?'
நண்பர்கள் யோசிக்கின்றனர்
துர்நாற்றம் பழகிவிட்டது.

அறை
புதிதாய்த் தேடுவது முடிகிறதா?
சுதந்திரமாகத் திரிகிறவைகள்
உடலை
தீண்டாமல் இருக்கும் வரை
பாக்கியசாலிதான்
கீச்சிடும் சத்தம் கூட
உடைந்த ரெக்N;காட்டின் சத்தம்போல்...

உறவுகள்
இழந்து வாழ்கின்ற எனக்கு
இவைகளே உறவுகள் போலத்தானோ?
வாழ்க எலிகளே!

முல்லைஅமுதன்

No comments:

Post a Comment