Monday 13 December 2010


திலீபா

ஒரு
ஈழத்துக் குயிலொன்று
அன்று
பாட மறந்தது...
ஆம்.. எங்களின்
சோகம் துடைக்கப்
புறப்பட்ட...
விடுதலைக்குயில்களும்
அவனுக்காய்..
எங்களுடன்
அஞ்சலி செலுத்திக் கொண்டன.

மனிதம் மறக்கப்பட்ட
மண்ணில்-
சூரியனைச் சுமந்து வரவே
புறப்பட்ட அவன்-
அமைதி தரவந்து
அமைதியையே கொலை
செய்த அவர்கள்
முன்-
தனித்தே விரதம் காத்தான்

'துப்பாக்கியை விட
விரதம் வலிமை மிகுந்தது'
எங்களையும்
நிமிர வைத்தது...
அங்கே பொபி சாண்ட்ஸ்
இங்கே .. இவன்..
ஒளித்து ஓடுதல்
மரணபயம்... இவைகளை
ஒழித்து-
எங்களை-
நிறுத்தி...
வீதிக்கு வரச் செய்தவன்.

'நீ நிமிர்ந்தால்
வானம் காலடியில்'
அவை
கறுப்பு நாட்களே....
எனியாவது
தூக்கம் கலைந்து எழுந்து
வாருங்கள் தோழர்களே!

'அக்கினி நாட்கள்
இதுவென...
ஒரு புதிய விதி
செய்வோம் என்றே'
திலீபனும்
மீண்டும் எங்களில்
உயிர்பெறுவான்!



முல்லை அமுதன்
லண்டன்.

No comments:

Post a Comment