Monday 13 December 2010

இன்றுவரை...
குடைவழி ஒழுகும்
மழை நீர்
குடி நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று.
நடை பாதை கூட
மக்கள் குடியிருப்பாயிற்று.

அகதி என்று சொல்லாதே..!
இடப்பெயர்வு என
அடித்து சொல்லும் காற்று!!
எனினும்..எனினும்..
இன்று வரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு
பயந்து வீழ்ந்து அழுமே
என் குழந்தை..
நாளாந்த வலியாக தொடரும்!

-முல்லைஅமுதன்

No comments:

Post a Comment