Monday 13 December 2010


நானும் நீயுமான...என்னை நீங்கள்
நிறம் பிரிக்கலாம்...
அது-
உங்கள் உரிமை..
இவன்-
இந்த தெருவில் வசிப்பவன்.
இன்னாரின் மகன்
என்றாலும்-
எதுவும் சொல்வதற்கில்லை..!
மழை-
எனக்கும் சேர்த்தே பொழிகிறது.
என்பதை-
மறுக்கிற போது தான்
கோபம் வருகிறது..!
பனிப்பூக்கள்
உன் வீட்டிலும் பூத்தது...
என் தவ்று எதுவுமில்லை..!
என் மரணம் பற்றி
நீ-
சிலாகிக்கும் போது
நெருப்பை
துப்ப மனது விரும்புகிறது.
நீ யார் என்
மரணம் பற்றி சொல்ல...?
கடவுள் என்கிறய்.
அப்படியானால்
இத்தனை நாள்
வழிபட்டது யாரை?
முகம் சிதைகிற-
ஒரு நாள் வரும்..
அப்போது
என் வினாவுக்குரிய
பதில்
உன்னிடமிருந்து
நிச்சயம் வரு..!
முல்லைஅமுதன்-
20/05/90

No comments:

Post a Comment