Sunday 20 January 2013

பொங்கல் பிச்சை
















உனக்கானது எனக்கும்
எனக்கானது உனக்கும்
வசமாக வேண்டும்.
அப்போது சொல்லு..
வாயார வாழ்த்துகிறேன்.
பொங்கிய நினைவுகளை நீயே
அழித்துவிட்டு-
வேடிக்கையா காட்டுகிறாய்?
எனக்கு பசிக்கிறது.
உணவில்லை.
நீ பிச்சையிடுகிறாய்!
இதை நட்பென்று எப்படிச் சொல்ல?
நீ சொல்லித் தானே
பாதுகாப்பானது என
வந்து இழந்தோமே?
குருதி காயவில்லை.
வாழ்த்து சொல்ல விரும்புகிறாய்.
முடியாது போ.
இன்னொரு யுக அழுகை உன்னால் வேண்டாம்.
என் முற்றத்தில் நாம் பொங்கும் காலம் வரும்.
அப்போது வா..
அன்னியனாகவே கை குலுக்கலாம்.
காலம் விரும்பினால்
சமமாய் பசியாறலாம்.
பிச்சை வேண்டாம்  போ!!
-முல்லைஅமுதன்
  11/01/13

1 comment:

  1. என் முற்றத்தில் நாம் பொங்கும் காலம் வரும்.
    அப்போது வா..
    அன்னியனாகவே கை குலுக்கலாம்.
    காலம் விரும்பினால்
    சமமாய் பசியாறலாம்.
    பிச்சை வேண்டாம் போ!! அழகிய ஏக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete