Sunday 20 January 2013

எலி..!
















பொறிக்குத் தப்பியவை
தங்கள்
குழந்தைகளையும்
என் அறைக்கு
அறிமுகம் செய்து வைத்துள்ளன.
நல்ல வேளை
புத்தகங்களைத் தின்னும்
சூட்சுமத்தை இன்னும்
கற்றுத் தரவில்லை.
பொறி
நஞ்சு..
இப்போ சலித்துவிட்டது.
ஜீவன் பிரிவதைத் தாங்க முடிவதில்லை.

"ஜீவகாருண்யத் தலைவனாக்கலாமோ?"
நண்பர்கள் யோசிக்கின்றனர்.
துர்நாற்றம் பழகிவிட்டது.
அறை
புதிதாய்த் தேடுவது முடிகிறதா?
சுதந்திரமாகத் திரிகிறவைகள்
உடலை
தீண்டாமல் இருகாமல் இருக்கும்வரை
பாக்கியசாலிதான்.
கீச்சிடும் சத்தம் கூட
உடைந்த ரெக்கோட்டின் ஒலி போல்..
உறவுகள்
இழந்து வாழ்கின்ற எனக்கு
இவைகள் உறவுகள் போலத்தானோ?
வாழ்க எலிகளே!
    முல்லைஅமுதன்
      -2006

No comments:

Post a Comment