Sunday, 23 January 2011


இன்று வரை..!
குடை வழி ஒழுகும்
மழை நிர்
குடி நீராகும்..
சேற்று நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று!
நடை பாதை கூட
எங்கள் குடியிருப்பாயிற்று..
அகதி என்று சொல்லாதே!
இடப்பெயர்வு என
அடித்துச் சொல்லும் காற்று!
எனினும்..எனினும்..
இன்றுவரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு-
பயந்து விழுந்து அழுமே
என் குழந்தை!
நாளாந்த வலியாக இது தொடரும்..
முல்லைஅமுதன்.

3 comments:

  1. ஈழத்தின் சோகத்தையும் ஆழத்தையும் தெளித்து இருக்கிறீர்கள்.



    நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
    சந்தக்கவி.சூசைப்பாண்டி.
    www.kalanchiyem.blogspot.com

    ReplyDelete
  2. உள்ளத்தை அள்ளுகிறது

    ReplyDelete
  3. வலி என் நெஞ்சில்

    ReplyDelete