Friday 4 January 2013

போராடுவோம் தமிழனாக













இன்னும்
நாம் முகமூடி மனிதர்களாய்
வாழத்தான் வேண்டுமா?
சதுக்கத்தில் நோன்பிருந்ததை
மறந்து புழுதிமண்ணைத்
தட்டியபடி
விமானம் எடுத்தோரே..
உங்கள் காணிகள் சுகமா?
முந்திப் பார்த்த சனமும் நலமா?
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
மீதேறி
நின்றபடி
உரத்துச் சொல்லுங்கள்...
தமிழனென்று...
மாமனிதர்களின் வலி மறந்தோரே-
வெட்கமாக இல்லை...
அரசு தரும்..
இந்தியா தரும்..
ஐ.நா பெற்றுத் தரும்
என்று இலவசங்களை
எதிர்பார்க்கும் வீணர்களே..
விழி பிதுங்கி வலி அடக்கி
சாவினைத் தழுவிய எத்தனை மனிதங்கள்?
உலக முதலைகளிடம் மனிதங்களை
எப்படி எதிர்பார்ப்பாது?
முதலில் நாமே சுமக்க முனைவோம்...
குறைந்த பட்சம் மானுடம் காக்கும் மனிதர்களாக,
தமிழனாக இருப்போம்...
ஈழக் கனவுகள் நமக்கும்தான் என்பதை உணர்வோம்...
போராடுவோம்!

முல்லைஅமுதன்
09/12/12

No comments:

Post a Comment