Saturday 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்

Sunday 25 December 2011

நூல்களும்....


நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..!
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்..
இப்போது நீ..!...
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்...
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்...?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே....
என்னைப்போல இறந்து விடுவார்கள்...!
- முல்லைஅமுதன் -