Monday 13 December 2010

படுத்திருப்பதே சுகமானது!


சும்மா படுத்திருப்பதே
சுகம் தருகிறது.
கூரையை விறைத்துப் பார்த்த படி..
மல்லாக்காக படுத்திருகிற போது-
வானம் கறுத்தால் தான் என்ன?
+
கால்களை எறிந்தபடி-
எதுவும் நடவாதது போல...
வானம் நீலமாயிருந்தால் தான் என்ன?
+
பிள்ளைகள் கத்தட்டுமே!
பாத்திரங்களுடன் போராடும் மனைவி
பற்றிய கவலையே தேவை இல்லை.
+உபகாரப் பணம் வங்கியில் சேரும்.
களவில வாங்கின வீடு வாடகையைத் தரும்.
சும்மா படுத்திருப்பதே சுகம்.
அவ்வப்போது...
பிள்ளைகளின் பிறந்த நாள் கேக் வெட்டலாம்.
அறுபதாம் கல்யாணத்துக்குப் போகலாம்.
கீரிமலையை நினைத்து கடல் குளிப்பு..
கூவிலை நினைத்து கிடாய் வெட்டு..
வேறென்ன...
சும்மா படுத்திருப்பதே சுகமானது.
பரவாயில்லை...!
வானம் பொழிகிறது.
பொழியட்டுமே.
என் மேனியில் படாதவரை
சளி பிடிக்காது.
காற்று உடலில் பட்டு சுகத்தைத்
- தர படுத்திருக்கலாம்.
யாராவது தோள் தந்தால்
ஏறி நின்று சவாரி செய்வது
பிடித்தமான பொழுதுபோக்கு.
ஊர்வலமா? எதற்கு?
யாராவது குத்தி
அரிசியாய் தந்தால் கஞ்சி குடிக்கலாம்.
கூட்டத்தோடை கத்தினால் தெரியாது தானே...
ஊருக்கும் போக வேணும்.

ஆமி பிடிக்கும்..
அங்கும் சொல்லலாம்.
தமிழ் ஈழமோ?

சாச்ச..ஆர் கேட்டது?
இலவச உணவு சாப்பிட்டிட்டு-
வந்து
படுத்திருப்பதே சுகமானது.
செம்மொழி மாநாட்டிற்கு
போகலாம்..
கொழும்பிலும் விழாச் செய்யலாம்.
பிறகு-
ஈழம் ஒரு செத்த கனவு...
வானொலியில் குரல் தரலாம்.
சும்மா இருப்போம்.
நாங்கல் வாழ அவர்கள் மரனித்ததை
மறந்து-இன்னும் சாக...விசா வேண்டி பிரர்த்திக்கிற
மந்தைக் கூட்டமாய்...
'டமிலராய்'
சோரம் போவோம்...!
-முல்லைஅமுதன்-

No comments:

Post a Comment